திருச்சி திருவானைக்காவலில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது.
திருவானைக்காவலில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நேற்று நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி திருவானைக்காவல் அழகிரி புறம் அருகே எ யூ டி நகரை வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது 45) இவர் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார் இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 19 ) இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்
நேற்று காலை குடிபோதையில் சோமசுந்தரம் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு ஈடுபட்டதாக தெரிகிறது.
அதை மோகன்ராஜ் தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த மகன் மோகன்ராஜ் மரக்கட்டையை எடுத்து சோமசுந்தரத்தை தலையில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கிய சோமசுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன் ராஜை கைது செய்தனர்.