திருவரங்கத்தில்
விளம்பர பேனர்
வைப்பதில் தகராறு
தந்தை. மகன் மீது தாக்குதல்

இரண்டு பேர் கைது .
மதுரை மீனம்மாள்புரம் முனியாண்டி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் கார்த்திகேயன்.( வயது 24) இவர் விளம்பர பேனர் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கார்த்திகேயன் தனது தந்தையுடன் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையின் விளம்பர பேனரை வைத்தனர் அப்போது
அதே பகுதியைச் சேர்ந்த விஜய் ,ஹரி, நவீன் குமார் (வயது 25 ) பிரசாந்த் (வயது 23) ஆகிய 4 பேரும் சேர்ந்து மரக்கட்டை மற்றும்
கல்லால் தந்தை மகன் இரண்டு பேரையும் தாக்கினர்.
இதில் குருசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நவீன் குமார் ,பிரசாந்த் ஆகிய இரண்டு பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான விஜய், ஹரி ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.