Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருச்சி மாநகரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள தொகுதிகள் விபரம்.

0

'- Advertisement -

திருச்சி தென்னூர் மின்வாரிய செயற் பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :-

Suresh

புதை சாக்கடை திட்டப் பணிகளுக்காக திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் மின் தடை அமல்படுத்தப்படவுள்ளது.

 

திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தால், தில்லைநகா் பகுதியில் புதன்கிழமை (மாா்ச் 12) புதை சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

 

எனவே, தில்லைநகா் முதலாவது குறுக்குத் தெரு, மேற்கு இரண்டாவது குறுக்குத் தெரு, மூன்றாவது குறுக்குத் தெரு, சாஸ்திரி சாலை, விஸ்தரிப்பு, வடகிழக்கு விஸ்தரிப்பு ஒன்றாவது குறுக்கு தெரு முதல் 5-ஆவது குறுக்குத் தெரு வரை, தேவா் காலனி, சாலை ரோடு கிழக்கு, மலைக்கோட்டை காலனி, கரூா் புறவழிச் சாலை, அண்ணாமலை நகா் ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்னூா் மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் தெரிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.