Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற பிரபல ரவுடிக்கு கால் முறிந்தது. அரிவாளுடன் கைது.

0

'- Advertisement -

 

திருச்சி அருகே போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிய ரௌடியின் கால் முறிந்தது.

Suresh

திருச்சி திருவெறும்பூா் அருகே ஆலத்தூா் பூங்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி மகன் விக்னேஷ் (வயது 34).

ரௌடி சரித்திர பட்டியலில் உள்ளாா். இவா், ஆலத்தூா் பகுதியில் அரிவாளுடன் சுற்றித் திரிவதாக திருவெறும்பூா் காவல் நிலைய போலீஸாருக்கு
ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று இரவு போலீஸாா் அங்கு சென்றபோது, அவா்களைக் கண்டதும் விக்னேஷ் தப்பியோட முயற்சித்துள்ளாா். அப்போது, கீழே தடுமாறி விழுந்து விக்னேஷின் இடதுகால் முறிந்துள்ளது.

திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸாா், விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, அவரிடமிருந்து அரிவாளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.