திருச்சி கோர்ட்டில் வரும் திங்கட்கிழமை சர்க்கரை, ரத்த அழுத்த இலவச பரிசோதனை முகாம். குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிக்கை.
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழகத்திலே முதல்முறையாக
துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில்
கட்டாயமாக இலவசமாக ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக
இரண்டாம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம்
வரும் 6/1/2025 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை
நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இம் முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் எனது தனது அறிக்கையில் கூறியுள்ளார் .