Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் 30ம் தேதி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாற்றும் நிகழ்ச்சி.

0

'- Advertisement -

 

திருச்சி கல்லுக்குழியில்   அமைந்துள்ள  புகழ்மிக்க அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு வரும் மார்கழி 15 ஆம் தேதி ( 30.12.2024) திங்கட்கிழமை அன்று பக்தர்களின் நன்மைக்காகவும் , உலக நன்மை கருதியும் ஆஞ்சநேய சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையினை தொடர்ந்து காலை 7:00 மணி முதல் 1,00,008 வடை மாலை சாற்றுதல் விழா நடைபெற உள்ளது .

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கல்யாணி, உதவிய ஆணையர் லட்சுமணன் ஆகியோரின் ஆலோசனையின் படி கோவில் செயல் அலுவலர் பொன் மாரிமுத்து , தக்கார் சுந்தரி, அர்ச்சகர் வரதராஜன், மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர் .

மேலும் அனுமன் ஜெயந்தி விழாவில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளை பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.