Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி திடீர் ஆய்வு. பீமநகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப் பராமரிக்க உத்தரவு. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆய்வு .

0

'- Advertisement -

 

திருச்சி பீம நகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி உத்தரவிட்டுள்ளாா்.

திருச்சி பெரிய கடை வீதி அங்காளம்மன் கோயில், பாலக்கரை செல்வ விநாயகா் கோயில், பாலக்கரை வெளிகண்டநாதா் கோயில், பீமநகா் செடல் மாரியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் இந்துசமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி நேற்று சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்காளம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் தூா்ந்த கோயில் தெப்பக்குளத்தை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து பாலக்கரை செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

Suresh

தொடா்ந்து, திருச்சி பீமநகா் செடல் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றபோது, கோயிலின் பிரதான நுழைவாயில் மற்றும் கருவறை மூடியிருந்ததால், வேறு பாதை வழியாக உள்ளே சென்ற இணை ஆணையா், உச்சிக்கால பூஜை தொடா்ந்து நடைபெறவும், கோயிலின் மின்னியல் (எலக்ட்ரிகல்) பொருள்களை முறையாகப் பராமரிக்கவும், மடப்பள்ளி மற்றும் பிரகாரத்தை தூய்மையாகப் பராமரிக்கவும் உத்தரவிட்டாா்.

பின் கிருஷ்ணன் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தையும், கோயில் இடத்தில் செயல்படும் கடைகளையும் நேரில் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது செல்வ விநாயகர் கோயில் செயல் அலுவலர் ஜீவானந்தம் , இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் கோயிலில் செயல் அலுவலராக செயல்பட்ட போது கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி சிறப்பாக செயல்பட்டார்.

 

திருச்சி மாவட்ட இந்து சமய அறநிலை துறை இணை ஆணையராக பொறுப்பேற்ற பின் தொடர்ந்து 12 மணி மணி நேரம் ஆய்வு மேற்கொண்டதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் . ( இதுவரை  எந்த இணை ஆணையரும் செய்யாத பணி இது. இப்ப பணி தொடர வாழ்த்துக்கள் )

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.