Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஷ் சீருடையில் ரூ.97 ஆயிரம் பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.

0

'- Advertisement -

திருச்சி மாநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.மாவட்ட நிலைய அலுவலராக ஜெகதீஷ் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி பட்டாசுக்கடை, ரைஸ்மில், வணிக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் தீயணைப்பு துறையினர் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.

மேலும் தீபாவளி நேரம் என்பதால், தற்காலிக தீபாவளி பட்டாசு கடைகள் அமைப்பதற்காக உரிமம் மற்றும் தடையில்லா சான்று பெறுவதற்காக லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று மதியம் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது. அங்கு பெரிதாக எதுவும் சிக்காத நிலையில், பின்னர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் வாகனத்தை சோதனையிட்டனர் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

அப்போது, அந்த வாகனத்தில் இருந்த சீருடையில் ரூ.97 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருச்சி தீயணைப்புத்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.