திருச்சி மாவட்டம்,திருவெறும்பூர் அருகே கூத்தைப்பாரில், மூன்று நாட்களுக்கு முன், அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சி அமைப்பு செயலரும், முன்னாள் கொறடாவுமான மனோகரன் பங்கேற்றார்.
அவரை வரவேற்க, வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த ராஜா என்ற கட்சி நிர்வாகி பட்டாசு வெடித்தார்.பட்டாசு துகள், பாதுகாப்பு பணியில் இருந்த, திருவெறும்பூர் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சுப்பிரமணியன் கண்ணில் பட்டு, படுகாயம் அடைந்தார். அவரை பரிசோதித்த கண் டாக்டர்கள், ‘பார்வை திரும்ப கிடைக்க வாய்ப்பு குறைவு’ என்று கூறிவிட்டனர்.மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் கொறடா மனோகரன் உட்பட, 20 பேர் மீது, திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பட்டாசு வெடித்த அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, (வயது 36) ராகவன், (36) முகமது ரபீக்,( 32 ) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.