திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஜியாலஜி துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கனிமங்கள் மற்றும் புதை படிமங்கள் விழிப்புணர்வு பயிலரங்கு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிலத்தியல் (ஜியாலஜி) துறையில் கனிமங்கள் மற்றும் புதை படிமங்கள் விழிப்புணர்வு நாளை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு நடைபெற்றது. இதில் திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இத்துறைத் தலைவர் பேராசிரியர் ரெ.சக்திவேல் துறை மாணவர்களும், கனிமங்களின் வகைகளையும், பல்வேறு வகையான கடல் வாழ் புதை படிமங்களின் முக்கியத்துவத்தையும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கி கூறினர். இதன் தொடர்ச்சியாக ஜியலாஜி மியூசியத்தில் உள்ள பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறை வகைகள், பல்வேறு தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் கனிமங்கள், புதை படிமங்கள், டயனோசர் முட்டை மற்றும் புவி சார்ந்த பல்வேறு வகையான தகவல்கள் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக புரிந்து கொள்ளும் விதமாக காட்டப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா, ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் சுருளி நதி கலந்துகொண்டு வாழ்த்துறையும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் பேராசிரியர் ரெ. சக்திவேல் செய்திருந்தார்