Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது. 2 பேர் எஸ்கேப்

0

 

திருச்சி பாலக்கரையில்
சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை -வாலிபர் கைது.

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், தலைமைக்காவலர் கார்த்திக் தலைமையிலான போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்து வந்தனர். இந்நிலையில் குட்ஷெட் ரோடு கருமாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற மூன்று வாலிபர்களை பிடிக்க முயன்றனர் .அப்போது இருவர் தப்பி ஓடிவிட்டனர் .ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய போதை மாத்திரைகளை விற்றது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சையது முஸ்தபா என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தப்பி ஓடிய பிள்ளை மாநகரைச் சேர்ந்த அஜித் , அல்லா பிச்சை ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.