Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கே.கே.நகர், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் லாட்டரி விற்றதாக 3 பேர் கைது.

0

'- Advertisement -

 

Suresh

கே.கே.நகர், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில்
லாட்டரி விற்றதாக 3 பேர் கைது.

திருச்சி கே.கே.நகர் மங்கம்மாசாலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்று ,தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கஞ்சா விற்றதாக கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கரிகரன் (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து கஞ்சா பற்முதல் செய்யப்பட்டது .

இதே போல் காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக வரகனேரியை சேர்ந்த அங்கமுத்து, எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த நாராயணசாமி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.