
திருச்சி சத்திரம் அருகே பள்ளி மாணவிகள்
2 பேர் திடீர் மாயம்.
திருச்சி சங்கரன்பிள்ளை ரோடு பிரிஸ்டன் பத்திரி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சுகன்யா (வயது 32).பழ வியாபாரி. இவரது மகள் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது கன்சிகாவும், இவரது சகோதரர் சரவணனின் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் கீர்த்தனாவும் டிபன் வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சுகன்யா கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிந்து மாயமான இரண்டு மாணவிகளை தேடி வருகிறார்.

