திருச்சியில்
டாஸ்மாக் ஊழியரை தாக்கி வாகனம், செல்போன் பறித்த 3 நபர்களுக்கு போலீசார் வலை.
திருச்சி உறையூர் கீரைக் கொல்லை தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் முகமது ஜமீர் (வயது 43). இவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார் .நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் குடமுருட்டி ரயில்வே கேட் அருகில் வந்த போது மூன்று மர்ம நபர்கள் முகமது ஜமீரை வழிமறித்தனர். அப்போது அவர்கள் முகமது ஜமீரை தாக்கி செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து முகமது ஜமீர் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் மூன்று பேரை தேடி வருகிறார்.