Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக பெண் காவலரின் கணவரான ராணுவ வீரர் கைது.

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலாஜி (வயது 31) இவர் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராணுவ வீரர் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இராணுவ வீரரின் செல்ஃபோனை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ராணுவ வீரர் ஜெயபாலாஜி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.