Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூர் பாத்திரக்கடை அதிபர் வீட்டில் திருட முயன்ற 2 பேர் கைது.

0

'- Advertisement -

 

திருச்சி உறையூரில்
பட்டப் பகலில்
பாத்திரக் கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 கைது

திருச்சி உறையூர் அக்ரகாரம் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல் (வயது 50) இவர் அங்குள்ள காமாட்சி கோவில் பகுதியில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் காலையில் கடைக்கு சென்ற அவர் பிற்பகல் மதிய உணவுக்காக வீடு திரும்பினார் அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி பின் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்து தப்பி ஓட முயன்றனர்.
சுதாகரித்துக் கொண்ட கனகவேல் வீட்டின் கதவை சாத்தி இருவரையும் மடக்கிப் பிடித்தார்.

பின்னர் உறையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார் தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ரெண்டு பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் கைதானவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலிகான் (வயது 23) பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது இர்ஃபான் பதன் (19) என்பது தெரியவந்தது.
பட்டப் பகலில் பாத்திரக்கடை உரிமையாளர் வீடு புகுந்து பணம் திருடிய ச பேர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.