Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம் .

0

'- Advertisement -

 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர். கணேசன் ஆலோசனைப் படியும் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பேராசிரியர் முனைவர் தனராஜன் தலைமையேற்று துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல்  கலந்துகொண்டு ரத்ததானம் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம், பான்  செக்கர்ஸ் கல்லூரியின் இயக்குநர் தெரன்சியா மேரி, கல்லூரியின் முதல்வர் முனைவர் காயத்திரி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின்  தஞ்சை மாவட்ட பொருளாளர் & செயலாளர் (பொறுப்பு) ஷேக்நாசர், தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் கிஷோர்குமார், பான் செக்கர்ஸ்  பெண்கள் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வித்யா, பேராசிரியர் சசிகலா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில்  பான்  செக்கர்ஸ்  பெண்கள் கல்லூரியின்  35 மாணவிகள் இரத்ததானம் செய்தனர்.

இரத்ததானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.