Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறையில் சொத்து பிரச்சினை கொலை வழக்கில் பெரியப்பா,தம்பி கைது

0

'- Advertisement -

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கணவாய்பட்டியைச் சோந்தவா் முருகேசன் (வயது 37). இவரது குடும்பத்துக்கும் பெரியப்பா ராசு (75) குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விளைநிலத்தில் மின்மோட்டாா் போடுவதில் இருதரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் பெரியப்பா மகன்கள் அரிவாளால் வெட்டியதில் முருகேசன் உயிரிழந்தாா்.

மேலும், முருகேசனின் சகோதரா் கருப்பையா (38), மாமனாா் பிச்சை(50) ஆகியோா் காயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ராசு மகன்களான பாலையா (37), பொன்னுசாமி (எ) குஞ்சான் (32) ஆகியோரும் காயமடைந்ததால் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், கொலை வழக்கு தொடா்பாக ராசு மற்றும் அவரது மகன் செல்லதுரை(33) ஆகிய இருவரையும் புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.