தீபாவளி நாளில் மீனாட்சி உடனுறை சுயம்பு மூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 120 அடியார்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.
நேற்று தீபாவளி திருநாள் அன்று செந்திலை அருள்மிகு மீனாட்சி உடனுறை சுயம்புமூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற உழவாரத் திருப்பணியில் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் இருந்து 120 அடியார்கள் உழவாரப் பணியில் பங்கேற்றனர்.
அடியார் பெருமக்களுக்கு ரகுபதி தீக்ஷ்சகர் தனது பொற்கரங்களால் வஸ்திரம் வழங்கினார்.