Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: மனைவி பிரிந்ததால் மது போதையில் பெயிண்டர் தற்கொலை.

0

'- Advertisement -

 

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மனைவி பிரித்ததால் பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமர் .இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 35). பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (வயது 29) என்ற பெண்ணுக்கும் இடையே 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில் எனக்கு யாரிடமும் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை. தனியாகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் அளவுக்கு அதிகமாக மதுவை குடித்துவிட்டு நைலான் கயிற்றால் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்படிபுதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.