Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வாலிபரை கொன்று ஆற்றில் வீசிய 4 பேர் போலீசில் சரண்.

0

'- Advertisement -

திருச்சியில் வாலிபர்
அடித்து கொன்று காவிரி ஆற்றில் பிணம் வீச்சு
4 பேர் கைது –  பிணத்தை தேடும் போலீஸ்.

திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன் என்பவரின் மகன் நாகூர் என்கிற நாகூர் மீரான் (வயது 29 ).இவர் இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு ஆர்ச் அருகே தனது சகோதரி தாஜ் நிஷாவுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளது. இது குறித்து நாகூர் மீரானின் சகோதரி தாஜ்நிசா கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்து கோட்டை போலீசார் அவரை தேடி வந்தனர். திருச்சி டவுன்ஹால் பகுதி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா, தேவதானம் பகுதியில் ஆய்வுக்காக சென்றிருந்த போது,  நாகூர் மீரானை கடத்தி சென்று கொலை செய்ததாக
பட்டவர்த் ரோட்டை சேர்ந்த  சண்டி என்கிற சக்திவேல்(வயது26), கீழ ஆண்டார் வீதியை சேர்ந்த விருமாண்டி என்கிற யுவேந்திரன்
(வயது19), மலைக்கோட்டை மேட்டு தெருவை சேர்ந்த அரசகுமாரன்
(வயது18), ஜான் தோப்பு பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்கிற பாலா
(வயது18) ஆகிய 4 பேரும் ஆஜராகி உள்ளனர்.

Suresh

இதனை தொடர்ந்து அந்த 4 பேரையும் கிராமநிர்வாக அலுவலர் கோட்டை காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தார்.  அவர்கள் நான்கு பேரிடமும் கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், நாகூர் மீரானை கடத்தி சென்று காவிரி ஆற்று ரெயில் பாலத்தின் நடு பகுதிக்கு கொண்டு சென்று அடித்து கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியதாக தொிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆள் கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்

.மேலும் ஆற்றில் வீசப்பட்ட நாகூர் மீரான் உடலை நேற்று மாலை முதல் காவிரி ஆற்றில் தேடும் பணியில் போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து ஈடுட்டனர்.இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணியை கைவிட்டனர். இன்று இரண்டாவது நாளாக நாகூர்மீரான் உடலை போலீசார் காவிரி ஆற்றில தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.மழை பெய்த காரணத்தால் தண்ணீர் வேகமாக ஓடுவதால் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை தேடும் பணியில் சிரமப்படுகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.