சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்: திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி தேசிய நாட்டு நலத் திட்டப் பணி மாணவர்கள் தேசிய ஒற்றுமை ஓட்டம்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம் -2 , வார்டு – 47 ல், திருச்சராப்பள்ளி , சாரநாதன் பொறியியல் கல்லூரி தேசிய நாட்டு நலத் திட்டப் பணி 30 மாணவ மாணவியர்களுடன் சர்தார் வல்லப்பாய் படேல் பிறந்த தினமான இன்று (31.10.2022) காலை 07.00 மணி முதல் 8.15 மணி வரை தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கும் பொருட்டு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நுழைவு வாயில் முதல் அண்ணா விளையாட்டரங்கம் வரை மண்டலம் -2 உதவி ஆணையர் அ.அக்பர்அலி தலைமையில்

மற்றும் சாரநாதன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மற்றும் தேசிய நாட்டு நலப் பணி ஒருங்கிணைப்பாளர் ஜி. ஸ்ரீராம் ஆகியோருடன் 3 கி.மீ வரை மாணவ மாணவிகளுடன் தொடர் ஓட்டம் நடத்தப்பட்டது.
மேலும் , அண்ணா விளையாட்டரங்கம் வாயில் முகப்பில் தேசிய ஒற்றுமை நாள்உறுதி மொழி கல்லூரி மாணவ மாணவியருடன் எடுத்துக் கொள்ளப்பட்டது.