Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

15வது ஆண்டில் தனது மகனுடன் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்த தினத்தை கொண்டாடிய யுவராஜ் சிங்.

0

 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்துஓய்வு பெற்ற முன்னாள் இந்திய யுவராஜ் சிங் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

இந்திய அணி பல சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற உறுதுணையாக இருந்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போது ஒரு ஓவரில் தொடர்ந்து அத்தனை பந்துகளையும் சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.

அந்த போட்டியின் இறுதியில் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இந்தியா 20 ஓவர்களில் 218 ரன்களை எடுக்க உதவினார். இறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இடது கை பேட்டர் யுவராஜ் 2007 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியிலும் முக்கியப் பங்காற்றினார். இறுதியில் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை 15 வருடத்துக்கு பின் தனது 9 மாத மகன் ஓரியன் கீச் சிங் உடன் கொண்டாடினார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில், “15 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஒன்றாகப் பார்க்க ஒரு சிறந்த துணையைக் கண்டுபிடித்திருக்க முடியாது” என்று பகிர்ந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.