திருச்சி மாநகரின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 21-ம் ஆண்டுப்பெருவிழா
29.08.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நவநாள்திருப்பலி நடைபெற்றுவந்தது. பெருவிழாவின் இறுதியாக நேற்று மாலை தேர்திருவிழா நடைபெற்றது.
தேர்பவனிக்கு முன்னதாக சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது.
திருப்பலியானது, இறைவார்த்தை சபையின் ஹைதராபாத்-தமிழ்நாடு மறைமாநில அதிபர் அருள்பணி. சாந்துராஜா (இறை வார்த்தை சபை) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருப்பலிக்குப்பின் தேர் மந்திரிக்கப்பட்டு பவனி தொடங்கியது. இந்த நிகழ்வில் திருக்கொடி இறக்கப்பட்டு நற்கருணை ஆராதனையோடு விழா நிறைவுபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 48வது மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி அமைப்புக்குழுத் தலைவருமான இ.எம் தர்மராஜ்,46 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்
உஷாராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேர் கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி
தெருக்களில் பவனியாக சென்று. இறுதியில் ஆலயம் வந்தடைந்தது.
இந்நிகழ்வுகளை கொட்டப்பட்டு ஆலய பங்குத்தந்தை அருள்பணி. பால் ஜெயக்குமார் (இறை வார்த்தை சபை) மற்றும் பங்குப்பேரவையினர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.