Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜாதி மோதல்களை கட்டுப்படுத்த ஸ்டாலின் அமைத்துள்ள ஆணையம் செயலற்று உள்ளது.திருச்சியில் செ.கு. தமிழரசன் பேட்டி.

0

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பி எல்.ஏ கிருஷ்ணா இன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது :

அண்மையில் தமிழகத்தில் சாதிய மோதல்கள், குறிப்பாக தலித்துகளை இழிவுபடுத்துதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. ஜாதிய மோதல்களை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க,. ஸ்டாலின் அமைத்துள்ள ஆணையம் செயலற்று உள்ளது. வன்கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு சமீபத்தில் நரிக்குறவர், குருவிக்காரர், குறவர் உள்ளிட்ட சமூகத்தினரை 7 ஜாதியினரை எஸ் டி (மலை சாதியினர்) பட்டியலில் சேர்த்துள்ளது. தமிழகத்தில் இந்த கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

2003 ஆம் ஆண்டே தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மக்களவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இந்த பட்டியிலில் நரிக்குறவர், குறவர், குருவிக்காரர் ஆகியோரை சேர்த்ததற்கு திமுக அரசு காரணம் கிடையாது.

இதைத்தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஒன்று முதல் 2 சதவிகிதம் வரை அதிகரிக்க வேண்டும். அதேபோல் நரிக்குறவர், குருவிக்காரர், குறவர் சமூகத்தினருக்கு இடையே பெயர் வேறுபாடு உள்ளது. யார் யார் நரிக்குறவர், குருவிக்காரர், குறவர் என்ற இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர வரலாற்றாளர்கள், மானுடவியலாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு தீர்வு காணப்பட வேண்டும். அரசு பணியிடங்களில் பிரிவு 1 முதல் 4 வரை உள்ள பின்னடைவை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் தற்போது என்ன ? குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் 30 கோடி ரூபாய் இதற்கு செலவாகும். ஆகையால் இதன் அவசியத்தை முதலில் குறிப்பிட வேண்டும் என்றார்.

பேட்டியின் போது, இந்திய குடியரசு கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் மங்கா பிள்ளை, மாநில பொருளாளர் கெளரிசங்கர், மூத்த நிர்வாகிகள் அன்பு வேந்தன், திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாவட்ட தலைவர் கெளதமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.