திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதை அடுத்து செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படவுள்ளதா மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனையொட்டி அவ்வழியே நடைபெறும் போக்குவரத்தில் 5 மாத காலத்துக்கு தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலையில்) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை புறவழிச்சாலை (சென்னை – திருச்சி – திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடது புறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி வடகரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கா அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடது புறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில்
ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க் சாலை
வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து
திரும்பி சென்னை புறவழிச்சாலையில் சென்று, இரணியம்மன் கோயில் அருகே எதிர்திசைக்கு மாறி (சென்னை – திருச்சி – திண்டுக்கல் } சாலை) பழைய பாலத்தை கடந்து பின்னர் வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.
திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள், நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நகர பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம்.
இந்த நடைமுறை சுமார் 5 மாதகாலங்கள் நீடிக்கலாம்.
காவிரிப் பாலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி மேற்கண்ட மாற்றுப் பாதையில் பயணம் செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.