Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை?ம.நீ.ம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்.

0

 

நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை? திருச்சி மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் அறிக்கை.

“இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டவை சாலையில் மிதிபடும் அவலம்”

மகா சங்கரஹர சதுர்த்தியை முன்னிட்டு ஆன்மீக பெருமக்கள் தங்களது சங்கடங்கள் தீர தங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை திருக்கோவில்களில் கொடுத்து அகம் மகிழ்கின்றனர்.

ஆனால் அவ்வாறு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் சாலையில் வலிந்தோடி காலில் மிதிபடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

எங்கு இந்த கொடுமை என்றால் திருச்சி டவுன், வரகனேரி, சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் மேற்படி நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேற்படி திருக்கோவில் அர்ச்சகரிடம் நேரில் சென்று முறையிட்டால் எப்பொழுதுமே இப்படி தான் செல்லும் என அலச்சியமாக பதிலளிக்கிறார்.

இதனை உடனடியாக சரிசெய்யுமா இந்து சமய அறநிலையத்துறை என மக்கள் நீதி மய்ய திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்
வக்கீல்.கிஷோர் குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.