பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி.துணை போகும் கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு இட்டு இருந்தார்.
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் திருச்சி பாரதியார் சாலையில் அமைந்துள்ள ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கடந்த சனிக்கிழமை முழுநேர பள்ளி செயல்பட்டு உள்ளது.

மாலையில் ஆர்.சி. பள்ளி மாணவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்தினார்கள் பேருந்துக்களை நிறுத்தி முற்றுகையிற்றனர் என்ற செய்தி மட்டுமே வெளிவந்தது.
ஆனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட உத்தரவை காற்றில் பறக்க விட்ட திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்.
ஏன் இந்த திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜேம்ஸ் பள்ளி நிர்வாகம் மட்டும் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கினார் என விசாரித்த போது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான இனிகோ இருதயராஜ் நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என கூறியதின் அடிப்படையில் இந்த பள்ளி நிர்வாகம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களை அழைத்து வகுப்புகள் நடத்தியது தெரிய வந்துள்ளது.
இதனை தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பார்களா என ஆர்.சி. மற்றும் ஜேம்ஸ் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு.