குரூப்-டி பணிகள் அனைத்தையும் அரசு பணியாகவே வேலைக்கு எடுக்க வேண்டும் . தமிழ்நாடு அரசு எஸ்சி /எஸ்டி அலுவலக நலச் சங்க மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.
தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலக நலச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் மாநிலத் தலைவர் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மகாராஜன், டால்டன், மணி, கலைச்செல்வன், பாலகிருஷ்ணன், குமார். கார்த்திகேயன், வெற்றிவேல் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாநில பொதுச் செயலாளர் குமார் கூறுகையில்:-
அரசு பணி வாய்ப்பு பெறுகின்ற நுழைவு வாயிலாக இருக்கின்ற கடைநிலைப் பணிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசில் தற்பொழுது தனியார் மையம் ஆகிவிட்டது.
ஆகவே, இந்த ஷெட்யூல் இன மக்களுக்கான வேலை வாய்ப்பு அடைக்கப்பட்டிருக்கிறது.
எனவே தமிழ்நாடு அரசு இந்த கடைநிலைப் பணிகள் அதாவது குரூப் டி பணிகள் அனைத்தையும் அரசு பணியாகவே வேலைக்கு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
அதேபோன்று தமிழக அரசு பணிகளில் பணி அமைப்பை நிர்ணயிக்கின்ற
200ரோஸ்டட் சிஸ்டம் என்பது நீதிமன்ற ஆணையின் பேரிலே கைவிடப்பட்டு தற்போது மதிப்பெண் அடிப்படையிலே பணி அமைப்பை நிர்ணயிக்கின்ற நடைமுறை இருந்து வருகிறது. இதனால் பட்டியல் என பணியாளர்கள் அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்
ஆகவே ஒன்றிய அரசிலும், அருகாமை மாநிலமான கர்நாடக அரசிலும் இருப்பதை போன்று பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்,
அதேபோல் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கின்ற அரசாணையை விரைந்து இந்த ஆண்டுக்குள் வெளியிட வேண்டும் வேண்டும் எனவும் கூறினார்.