திருச்சியில் மூப்பனாரின் 91 வது பிறந்தநாள் விழா: தமாக மாவட்டத் தலைவர் இன்டர்நெட் ரவி தலைமையில் மலர் தூவி மரியாதை.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 91வது பிறந்த நாளினை விவசாய தினமாக கொண்டாடி,
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவர்தம் திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, இயக்கத்தின் கொடியினை ஏற்றி, இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட்
என்.ரவி தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர்,
கே.வீ.ஜி.ரவீந்திரன் ,
திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் குணா,மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால், மாநிலச் செயலாளர் ஸ்ரீரங்கம் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, தெற்கு மாவட்ட துணை தலைவர் சமுத்திரம் கணேசன், வடக்கு மாவட்ட துணை தலைவர் மருதநாயகம், மாநகர் மாவட்ட செயலாளர்கள் சரவணன், ரவிச்சந்திரன், சிவசக்தி, வெங்கடேசன், மனச்சநல்லூர் நகர தலைவர் சிவராமன், மகளிர் அணி தலைவி அன்னபூரணி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் உசேன், பாலக்கரை கோட்டத் தலைவர் கண்ணன், பாலக்கரை கோட்ட துணை தலைவர் ஹரி, செந்தண்ணீர்புரம் சுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணன், அன்னபூரணி, உய்யகொண்டான் திருமலை மனோகர், செல்வம் பட்டையதார், இளைஞரணி மாநில துணை தலைவர் கமல் , சிறுபான்மை பிரிவு பெரிய செளக் அனிஷ், தாராநல்லூர் வடிவேலு, சிந்தாமணி பாண்டியராஜன், மரக்கடை காசிம், எடத்தெரு முருகேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் சதீஷ், உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் இளைஞர் அணி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் தனசேகர் நன்றி கூறினார்.