திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில்
கல்லூரி மாணவ மாணவிகள் பேரணி
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தொடங்கி வைத்தனர்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜெனிவா உடன்பாட்டு நாள் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்,திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், ஆட்சிக் குழு உறுப்பினர் சேகர், பெரியார் கல்லூரியின் முதல்வர் சுகந்தி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், பெரியார் கல்லூரியின் பேரவை உறுப்பினர் கோபாலகிருஷ்ண், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவர் இன்ஜினியர் ராஜசேகர், செயலாளர் ஜவஹர் ஹாசன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நிர்வாகிகள் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியில் 600 யூத் ரெட் கிராஸ் தன்னார்வலராகிய தந்தை பெரியார் கல்லூரியின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியானது தந்தை பெரியார் அரசு கல்லூரியில் ஆரம்பித்து திருச்சி மன்னார்புரத்தில் நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் பங்குபெற்ற யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் ஜெனிவா ஒப்பந்த நாள் பற்றியும், 75 வது சுதந்திர தின சிறப்புகள் பற்றியும் முழக்கங்களை எழுப்பி சென்றனர்.
இந்த நிகழ்வை பெரியார் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும் திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர்ருமான குணசேகர் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்.