திருச்சிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.
திருச்சி மாநகருக்கு நாளை வருகை தரும்
எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்
மாவட்டச் செயலாளர்
ப.குமார் அறிக்கை:
திருச்சி மாநகருக்கு நாளை ( ஞாயிற்றுக்கிழமை) தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,முன்னாள் முதலமைச்சரும், கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி வருகை தர உள்ளார்.
ஆகவே திருச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பாக எடப்பாடி கே பழனிச்சாமிக்கு நாளை காலை 9.30 மணியளவில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் மாபெரும் வரவேற்பு அளிக்கபட உள்ளது.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைவரும் அணி திரண்டு வந்து வரவேற்குமாறு கேட்டுக் கொள்கிறோன்
இவ்வாறு ப.குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளனர்.