Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

75வது சுதந்திர தினம்.முன்னாள் மாநகர மேயர் எமிலி ரிச்சர்ட் தேசிய கொடியேற்றினார்.

0

 

திருச்சியில் 75வது.சுதந்திரத் தின விழா
முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் தேசிய கொடி ஏற்றினார்.

திருச்சி காஜாமலை ரேஸ் கோர்ஸ் ரோடு பகுதியில் இன்று 75 ம் ஆண்டு சுதந்திர தின பவள விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

அனைத்து வறுமை கோட்டினர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ராபர்ட் கிறிஸ்டி தலைமை தாங்கினார்.

இதில் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு அரசாங்க வீட்டு மனை வழங்க வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் ஏழை மக்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை காவல்துறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திருச்சி கண்டோன்மெண்ட் உதவி போலீஸ்
கமிஷனர் அஜய் தங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஹோப் தொண்டு நிறுவன இயக்குனர் இரா.சே.தினேஷ், தமிழ்நாடு திருநங்கை நல வாரிய உறுப்பினரும் சேவ் அறக்கட்டளை நிர்வாக மேலாளருமான காஜல் ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.