Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் சிதலமடைந்த காமராஜர் சிலையை மாற்றி புதிய வெண்கல சிலையை மாநில அரசு உடனடியாக நிறுவ வேண்டும். இந்திய நாடார்கள் பேரமைப்பு வேண்டுகோள்.

0

'- Advertisement -

திருச்சி சுப்ரமணியபுரம் எஸ்.பி. அலுவலகம் எதிரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவருவுச்சிலையை சீரமைக்க இந்திய நாடார்கள் பேரமைப்பு கோரிக்கை .

Suresh

திருச்சி சுப்ரமணியபுரம் எஸ் பி அலுவலகம் எதிரில் உள்ள பழைய மார்க்கெட் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய திருவருவுச்சிலை மிகவும் பழுதடைந்து கைகள் துண்டிக்கப்பட்டு உடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

இதனை பார்வையிட்டு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சௌந்தர பாண்டியன் நாடார் அவர்களின் ஆலோசனையின் பேரில் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அவர்கள் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் மூர்த்தி, திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சண்முகம், மாநகர மாவட்ட தலைவர் இளங்கோ, காட்டூர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பெருந்தலைவரின் திருவருட்சிலையை பார்வையிட்ட பின்,
பத்திரிக்கையாளர்களிடம் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் கூறும்போது, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதற்காக இந்திய அளவில் போற்றக்கூடிய பி.ஹெச்.எல் என்ற நிறுவனத்தை திருச்சி மாநகரில் கொண்டு வந்தவர். இந்திய திருநாடே போற்றக்கூடிய தேசிய தலைவராகிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய
திருஉருவசிலை பழுதடைந்து கிடப்பதை பார்த்து கண்ணீர் வருகிறது. திருச்சியில் பெருந்தலைவரின் திருஉருவ சிலைக்கு இப்படி ஒரு நிலைமையா, ஏன் தமிழக அரசு இதை கண்டு கொள்ளவில்லை, இங்கிருக்கும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் இந்த பெருந்தலைவரின் திருவுருவச்சிலையை பழுதை நீக்கி அல்லது புதிய வெண்கல சிலையை வைப்பதற்கு ஏன் முன் வரவில்லை. நாடார் சமுதாய மக்கள் தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய திருவருட்சிலையை பராமரிக்க வேண்டுமா ? தமிழகத்தை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், தொழிலிலும், விவசாயத்திலும் இந்திய திருநாட்டிற்கு முன் உதாரணமாக வழிகாட்டிய தமிழகத்தை ஆண்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பழுதடைந்த இந்தச் சிலையை மாற்றி புதிய வெண்கல சிலையை தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் அவர்கள் இந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின் போது ஏசைய்யா, வர்கீஸ் ராஜா, கந்தசாமி, சாமுவேல், கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.