திருட்டு நகை பிரச்சனை தொடர்பாக
காவல்துறையினர் நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும்
திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.
நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் அரையாண்டு ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி தஞ்சாவூர் ரோடில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் எம். தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராம்குமார் ஜி .கிருஷ்ணமூர்த்தி, மன்னச்சநல்லூர் தாலுகா சங்கச் செயலாளர் என். எஸ் .பி. சேகர், மணப்பாறை வட்டார சங்கத் தலைவர் அருட் செல்வம், எம். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக எஸ். வி. அன்பழகன் வரவேற்று பேசினார்.
திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் தலைவர் கந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக உணவும் மருந்தும் என்ற தலைப்பில் வணிகர்கள் தங்கள் உடல் நலத்தை பேண டாக்டர் ஐஸ்வர்யா ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் காப்பீட்டு துறை சார்ந்த அதிகாரிகள் பிரிமியம் மற்றும் அதன் பயன்களை விளக்கினர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகை அடகு பிடிக்கும் வணிகர்களை ஒன்று திரட்டி அவர்களுக்காக சங்கம் அமைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து கௌரவப்படுத்தி சிறப்பான மாநாட்டை நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்த நிர்வாகிகளை இந்த கூட்டம் பாராட்டுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பித்தல் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்களுக்கும் நமது சங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பு அரசு வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
1994 ஆம் ஆண்டு முதல் திருட்டு நகை பிரச்சனைகளில் காவல்துறை சாமானிய வணிகர்களை மிரட்டுவது எஃப்.ஐ. ஆர். போடுவது, இரவு நேரங்களில் வந்து தனியாக இருக்கும் கடைகளில் பறிமுதல் செய்வது, அலைக்கழிப்பது போன்றவற்றை கையாளுவதை தவிர்க்க வேண்டும்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரிடம் திருச்சி மாவட்ட சேம்பர் மூலமாக மனு கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் அதிகாரிகள் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.