திருச்சியில் கஞ்சா,லாட்டரி விற்ற
5 பேர் கைது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஓர் துணிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த மேலக்கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த வெங்கட்ராஜ் (வயது 69). என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு விற்றதற்கான ஆவணங்களும்,
பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் மன்னார்புரம், ஜங்ஷன் பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலை அடுத்து மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .
இந்த சோதனையில் பாலாஜி என்ற வாலிபரை கைது செய்தனர் .
அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கஞ்சா விற்றதாக மகேஷ் என்ற வாலிபரையும், ராம்ஜி நகர் அருகே புது காட்டூர் பகுதியில் கஞ்சா வித்ததாக சதீஷ் (வயது 23) என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.