Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் பசுமை தினம் மற்றும் கல்வி வளர்ச்சி நாள்.

0

'- Advertisement -

 

திருச்சி பொன்மலைப்பட்டி உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் இன்று பசுமை தினம் மற்றும் காமராஜரின் கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டு பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் , தலைமையில், பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். கவிதா முன்னிலையில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி. நீலமேகம் கலந்துக் கொண்டு பேசியது: மரங்களை வளர்த்து பாதுகாக்க வேண்டும், மனிதர்களை தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையை பாதுகாக்கின்றன. பறவைகள், விலங்குகள் அனைத்தும் பசுமையை பாதுகாக்கின்றது. எனவே மாணவர்களாகிய நீங்கள்தான் வருங்காலத்தில் இயற்கையை பாதுகாக்க வழிவகுக்க வேண்டும் என்று கூறினார்.

நிகழ்வில் மாணவ, மாணவிகள் பசுமையான உணவுகள் , கீரை, பட்டாணி, பச்சைபயிர், புதினா சாதம் போன்ற உணவுகள் ,

அத்துடன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பச்சை நிறத்தில் ஆடைகள் அணிந்து வந்தனர்.

நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் , மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.