நடிகர் விஜய்யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து 23 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த முகாமில் விஜய் ரசிகர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இதற்கான ஏற்பாட்டினை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பை தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் அரியமங்கலம் மூர்த்தி, கலை, மெடிக்கல் சதீஷ், சக்திவேல், ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக எற்பாடு செய்திருந்தனர்.
மாலையில் பொதுமக்கள் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.