பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை சார்பில் மனநோய் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பாரதிதாசன்
பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் மனநோய் மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருச்சி Dr. அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் விடுதியில் ஆனந்த் விடுதி காப்பாளர் உதவியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வரவேற்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை தலைவர் முனைவர் R. மங்களேஸ்வரன் அங்குள்ள மாணவர்களுக்கு வரவேற்புரை ஆற்றினார்.
அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கௌரவ விரிவுரையாளர்
முனைவர் K.S.வேல்முருகன் மற்றும் மாணிக்கஜோதி ஆகியோர் மாணவர்களுக்கு மனநோயால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார்கள்.
இறுதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை கௌரவ விரிவுரையாளர் காத்திகேயன் நன்றி யுரை வழங்கினார்.
முதுகலை முதலாமாண்டு மாணவர் தெ.சிலம்பரசன்,
சி.சுரேஷ்குமார் ஆகியோர் இணைந்து சிறப்பாக இந்நிகழ்ச்சியை செய்திருந்தினர்.
மாணவர்கள் ஆகிய சங்கர்,நவீன்ராஜ், சதீஷ், அருள்ராஜ் மற்றும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.