திருச்சி பெரிய கடை வீதியில்
வங்கி முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.
திருச்சிஅரபிக்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 74). இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெரிய கடைவீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிக்கு சென்றார். வாகனத்தை வங்கியின் முன்பு நிறுத்தியிருந்தார். வங்கிக்கு சென்ற பின் வந்து பார்த்தபோது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் .புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.