ஸ்ரீரங்கம் ஆள்துளை கிணறு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை கலெக்டர் உடனே கூட்ட மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை.
ஸ்ரீரங்கம் மேலூர் ஆழ்துளை கிணறு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும்”
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மேலூர் செட்டி தோப்பு, பண்ணைதோப்புயொட்டிய பகுதிகளின் திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆழ்த்துளை கிணறுகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தங்களது நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்று மேலூர் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் மேற்படி ஆழ்த்துளை கிணற்றால் நாள்தோறும் உறிஞ்சப்படும் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீருக்கு பதிலாக அதே அளவு நிலத்தடி நீரை சேமிக்கும் மாற்று திட்டம் எதுவும் திருச்சி மாவட்ட நிர்வாகம் வகுத்ததாக இதுவரை தெரியவில்லை.
எனவே பொதுமக்களின் அச்சத்திற்கு நியாயம் இருப்பதாகவே மக்கள் நீதி மய்யம் கட்சி கருதுகிறது. எனவே மேலூர் பகுதி பொதுமக்களின் நியாயமான இந்த கோரிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் தார்மீக ரீதியாக என்றும் மக்களுடன் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம்.
எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி மேலூர் செட்டிதோப்பு மற்றும் பண்ணை தோப்பு பகுதிகளில் அரசு சார்பில் ஏற்படுத்தப்படும் ஆழ்துளை கிணறு தொடர்பாக பொதுமக்களின் நியாயமான அச்சத்தை மற்றும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக உடனடியாக “பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தென் மேற்கு மாவட்டம் சார்பில் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
என வக்கீல்.S.R.கிஷோர்குமார்
(மாவட்ட செயலாளர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி தென் மேற்கு மாவட்டம்.
செல்: 98659 62927.) தனது அறிக்கையில் கூறியுள்ளார்