திருச்சியில் மாநகராட்சி முத்திரை சின்னத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை. எடுக்க வையாபுரி வலியூறுத்தல்.
தியாகி வ.உ.சி ஓர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சி முத்திரை சின்னம் கேலிக்கூத்து.
திருச்சி மாநகராட்சி பகுதியில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநகராட்சி முத்திரை பதித்த சின்னத்தை மாநகராட்சி ஊழியர் அல்லாத பலர் பயன்படுத்தி வருகின்றார்கள்.
மாநகராட்சி முத்திரை சின்னத்தை
தவறான தொழிலுக்கு பயன்படுத்தும் நபர்கள் பலர் அவர்களுக்கு சொந்தமான வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு பல்வேறு பகுதிகளில் உலா வருகிறார்கள்.
மாநகராட்சி முத்திரை சின்னத்தை ஆணையர் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்?

மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழில் செய்துவரும் ஒப்பந்த காரர்களும் ஒப்பந்த கூலி தொழில் செய்யும் நபர்களும் மாநகராட்சி அரசு சின்னத்தை தவறான தொழிலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்,
அவர்கள் மீது ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?
மாநகராட்சி அரசு சின்னத்தை மாநகராட்சி ஊழியர் அல்லாதவர்கள் பயன்படுத்தி வருவதை ஆணையர் இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது .
உயர் நீதிமன்றம் அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்டம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல்துறைக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் உத்தரவு வழங்கியுள்ளது.
இப்படி நீதிமன்ற உத்தரவுகள் பல இருந்தும் உத்தரவை மதிக்காமல் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணி செய்து வரும் ஒப்பந்தகாரர்களும் அவர்களது பணியாட்களும் மாநகராட்சிக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத நபர்கள் மாநகராட்சி அரசு சின்னத்தை பயன்படுத்தி வருவது கண்டிக்கத்தக்க செயலாகும்.
அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தும் அவர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையரை கேட்டுக்கொள்கிறேன்.
என தியாகி வ.உசி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.