இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ஏற்கனவே ரோகித் சர்மா விலகினார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலியும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டனாக இருந்த விராட் கோலி நீக்கப்பட்டு ,ரோகித் சர்மா நியமக்கிப்பட்டது குறிப்பிடத்தக்கது.