Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடைசி பந்தில் சிக்சர் அடித்த ஷாருக்கான்.ரசித்துப் பார்த்த தோனி. டுவிட்டரில் வைரல் ஆகி வரும் படம்.

0

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை தமிழ்நாடு அணி எதிர்கொண்டது.

இதற்கு முன்பு 2019 -ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் தமிழக அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தது.

இதனால் அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில் தமிழ்நாடு அணி களமிறங்கியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

இந்நிலையில் தமிழக அணி வீரர் ஷாருக்கான் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார்.

இதனால் தமிழக அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் டோனி, சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.