Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அய்யாக்கண்ணு தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்தில் சனல் கோமணத்துடன் விவசாயிகள் போராட்டம்.

அய்யாக்கண்ணு தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்தில் சனல் கோமணத்துடன் விவசாயிகள் போராட்டம்.

0

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்

மாநில துணை தலைவர்கள் மேகராஜன்,கரூர் தட்சிணாமூர்த்தி, சிறுகாம்பூர் பரமசிவம்,மாநில செயலாளர்கள் நகர் ஜான் மெல்கியராஜ், லால்குடி தியாகு, மாநில செய்தி தொடர்பாளர்கள் தீராம்பாளையம் பிரேம்குமார், வரப்பிரஹாஸ் ஆகியோர் முன்னிலையில்

மற்றவர்களுக்கு அள்ளி அள்ளி தரும் மத்திய அரசு விவசாயிகளுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை. விவசாய விலை பொருள்களுக்கு லாபகரமான விலை கொடுக்காததால் தீபாவளிக்கு புது துணி வாங்கி கட்ட முடியவில்லை ஆதலால் விவசாயிகள் தீபாவளியை வெறும் வாளி என்றும் தீபாவளியை கொண்டாடாமல் விவசாயிகள்

புது வேஷ்டி,சட்டை காட்டாமல் சணல் சாக்கை கோமனமாக கட்டி மோடி அய்யா காப்பாற்று! மோடி அய்யா காப்பாற்று! என்று வெறும் வாளியுடன் சணல் சாக்கில் கோமனம் கட்டி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது .

கடந்த 24 நாட்களாக தினம் ஒரு போராட்டத்தையும், ஜனநாயக நாட்டில் சுதந்திர இந்தியாவில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்களை 35 நாட்களாக வீட்டு காவலில் வைத்திருப்பது மருத்துவமனை மற்றும் எங்கு சென்றாலும் காவல்துறை அதிகாரிகள் 10 பேருடன் வருவது நியாயமா? விவசாயிகள் என்ன இந்த நாட்டின் அடிமைகளா? அல்லது தீவிரவாதிகளா?

Leave A Reply

Your email address will not be published.