பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும்.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.
பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும்.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.
அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா:
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.
வரலாற்று சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக வருகின்ற (17-10-2021) ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் ஆங்காங்கே அமைந்திருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கும், அவர்களது திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்குமாறும்
ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அளவிலான அனைத்து இடங்களிலும் அதிமுக கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கீழ்க்காணும் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நானும், அதிமுக முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
17-10-2021 ஞாயிற்றுக்கிழமை
காலை 9:00 மணி – சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர் சிலை
காலை 9:30 மணி- குழுமணி எம்.ஜி.ஆர் சிலை
காலை 10:00 மணி ஜீயபுரம் மெயின் ரோடு
காலை 10:15 மணி
பெட்டவாய்த்தலை கடைவீதி
காலை 11:00 மணி – முசிறி அண்ணா சிலை
காலை 11:30 மணி – துறையூர் எம்.ஜி.ஆர் சிலை
மதியம் 12:00 மணி – கரட்டாம்பட்டி எம்ஜிஆர் சிலை
மதியம் 12:15 மணி – புலிவலம் கடைவீதி
மதியம் 12:30 மண்ணச்சநல்லூர் எம்.ஜி.ஆர்-அம்மா சிலை
என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.