ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளுடன் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனை.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளுடன் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனை.
வையம்பட்டி வார்டு எண்.6க்கான இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ஆர்.ஜானகி அவர்களின் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய கழக செயலாளர்கள் வெங்கடாசலம், பழனிசாமி, சேது, செல்வராஜ், மணப்பாறை நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முருகன், மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

மேலும் தோப்புபட்டியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இப்பணியில் திருவெறும்பூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராவணன், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் பாஸ்கர், அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, நவல்பட்டு ஜெ. பாலமூர்த்தி, மற்றும் சூரியூர் அழகர், கதிரவன், அபிமன்யு, ஆனந்த், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.