இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.காதல் தோல்வியா போலீசார் விசாரணை.
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.காதல் தோல்வியா போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி ஸ்டாலின் நகரில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மனைவி வனிதா. கணவரை பிரிந்து வாழும் இவருக்கு 4 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் தற்போது உள்ளனர்.
இதில் 3-வது மகள் சவித்தா(வயது 19). கடந்த ஓராண்டிற்கு முன்னதாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த சவித்தா, செல்போன் மூலம் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனிமையில் மன வேதனையில் இருந்து வந்த சவித்தாவை,

தாய் வனிதா வெள்ளிக்கிழமை மாலை திட்டியதாக தெரிகிறது. பின் வீட்டிலிருந்த நிலையில் காணமல் போன சவித்தாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில் அருகில் இருந்த தனியார் தோட்டத்தில் இருந்த வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சவித்தா காவல்துறையினரால் நேற்று பிற்பகலில் மீட்கப்பட்டார்.
பின் உடற்கூராய்விற்காக சவித்தாவின் உடல் அரசு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சவித்தா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நேர்கொண்டு வருகின்றனர்.