Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலைப்பட்டி கடைவீதியில் வாலிபர் வெட்டிக்கொலை

0

'- Advertisement -

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சின்ராசு(வயது 21).

இவருக்கும் பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக இன்று பொன்மலைப்பட்டி கடை வீதி பகுதியில் சின்ராசு நடந்து சென்று கொண்டிருந்த போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இரண்டு நபர்களால் ஓட ஓட வெட்டி கழுத்து முகம் ஆகிய பகுதிகளில் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அலறி அடித்துக்கொண்டு கடைகளை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

பொன்மலை ஆட்டோ குழந்தை என்பவரின் மகன் அலெக்ஸ் (வயது 24) என்பவர் முன்விரோதம் காரணமாக தனது நண்பருடன் சின்ராசுவை வெட்டி கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தொிய வந்துள்ளது.

அலெக்ஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என கூறப்படுகிறது.

அப்பகுதி பேக்கரியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் நிக்சன் உதவி ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலை செய்து விட்டு தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.