ஜெயலலிதா பல்.கழகத்தை மாற்றத் துடிக்கும் திமுக அரசை கண்டித்து மு.பரஞ்ஜோதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக வினர் கைது.
அம்மா பல்கலைக்கழகத்தை மாற்றத் துடிக்கும் திமுக அரசை கண்டித்து

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்கள் தலைமையில் அராஜக திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் இந்திகாந்தி, ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி , சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், ஸ்ரீரங்கம் எஸ்.வி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பொருளாளர் செந்தில் குமார், வார்டு கழகச் செயலாளர்கள், மற்றும் கழக உடன்பிறப்புகள் கழக பேச்சாளர்கள் மகளிர் அணியினர்
ஆகியோர் கலந்துகொண்டு
திமுகவின் அராஜக அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போதுஅதிமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.







